Pages

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்

இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒருவிடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.

South Africa’s Cricket Player Wayne Parnell converts to Islam

South African fast bowler Wayne Parnell has converted to Islam after a period of personal study and reflection and will celebrate his 22nd birthday on Friday as a Muslim

pm shocked over karunanidhi family property

Here is the property list of Karunanidhi published by George Fernandez's The Other Side magazine.

சுதந்திர போராட்ட வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்

17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப் பட்டார்.மதவாதத்தை ஒரேடியாகக் குழி தோண்டிப் புதையுங்கள்" என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும்.

Story of Islam in Brunei and Malasiya

Islam reached Malaysia in the 7th hijri century. However, the exact year can not be decided.

Quran on Formation of Clouds and Rain

(And We send the winds fertilizing (to fill heavily the clouds with water), then cause the water (rain) to descend from the sky, and We give it to you to drink, and it is not you who are the owners of its stores [i.e. to give water to whom you like or to withhold it from whom you like].) (15:22)

May 30, 2011

நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (தொடர்-1)

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
இஸ்லாமிய போதனை மக்கா மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட வேளை அரேபியாமட்டுமன்றி அகில உலகுமே அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. இஸ்லாம் எனும் அறிவுத் தீபத்தை ஏற்ற வந்த அன்னல் நபி உம்மி (எழுத வாசிக்கத் தெரியாத) தூதராவார்.(1) அவர் இந்தத் தூதை எடுத்துச் சொன்ன சமூகம் (எழுத வாசிக்கத் தெரியாத) உம்மி சமூகமாகும் என்பதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. (2) வரலாற்று ஏடுகள் அக்காலத்தை ‘ஜாஹிலிய்யக்காலம்’ என அடையாளப் படுத்துகின்றன. நபி(ஸல்) அவர்களது 23 வருடகால கடின முயற்சியின் பின்னர் அரேபியர்களிடையே கலாசார பண்பாட்டு ரீதீயான முன்னேற்றம் ஏற்பட்டது போல் மிகப் பெரிய அளவில் அறிவியல் பேரெழுச்சியும் ஏற்பட்டது. அரேபிய தீபகற்பத்தையும் தாண்டி ஐரோப்பிய உலகுக்கும் அறிவொளிகளை வழங்கும் அளவிற்கு மகத்தானதொரு மாற்றம் நிகழ்ந்தது. இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களால் கூட புறக்கணித்து விட முடியாத அளவுக்கு அறிவியல் எழுச்சியின் உச்சத்தை அடைய அந்த சாதாரண ஆட்டுமந்தை மேய்த்தவர்களைத் தூண்டியது எது? இந்த திடீர் திருப்பத்திற்கான காரணங்கள் என்ன? அறிவியல் துறையில் முஸ்லிம்கள் நிகழ்த்திய சாதனைகள்? அதற்குச் சாதகமாக இருந்த காரணிகள், இன்றைய காலகட்டத்தில் இத்துறை முஸ்லிம்களுக்கு மத்தியில் வீழ்ச்சி அடைந்தற்கான காரணங்கள் என்பனவற்றை இங்கு நோக்குவோம்.
முஸ்லிம்களின் அறிவியல் எழுச்சி:
கி.பி. 500ம் ஆண்டு முதல் 1500ம் ஆண்டுவரையுள்ள காலம் மத்தியகாலம் என வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இருண்ட காலம் என்றும் வர்ணிக்கப்படும் இக்காலப் பிரிவில் ஐரோப்பிய நாடுகள் கூட கலை, கல்வி, கலாசார ரீதீயில் பெரிய வீழ்ச்சியைக் கண்டிருந்தன. இதே வேளை கிறிஸ்தவ உலகு அறிவியல் துறைக்கெதிரான அறிவிக்கப்படாத யுத்தத்தையே தொடங்கியிருந்தது.
கி.பி. 283ல் எகிப்திய ஆட்சிப்பீடத்திலேறிய இரண்டாம் தொலமி அலெக்சாந்திரியாவில் நிறுவிய பிரமாண்டமான நூல் நிலையத்தை தியோபிளஸ் எனும் பாதிரியின் தூண்டுதலால் கி.பி. 391ல் கிறிஸ்தவர்கள் தீயிட்டுக் கொழுத்தினர். அறிவியலை மதத்தின் பெயரால் எதிர்த்தவர்கள் அறிஞர்களையும் விட்டுவைக்கவில்லை. ‘இயேசு கிறிஸ்துவுக்குப்பின் எந்த விஞ்ஞானத்துக்கும் இடமில்லை, அவருடைய போதனைகளுக்குப் பின் எந்தவிதமான விஞ்ஞானப் போதனைகளும் தேவையில்லை. (3) என்று போதிக்கப்பட்டதால் விஞ்ஞானிகள் பலர் மதப்பிரிவினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறு அறிவியலுக்கெதிரான போராட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில் முஸ்லிம் உலகு அறிவுத்தாகம் கொண்டு, அறிவியலில் மோகம் கொண்டு பண்டைய அறிவியல் செல்வங்களைத் தேடி வந்து பெற்று அவற்றை மேலும் மெருகூட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
மேற்குறித்த நிலை பற்றி பிரபல வரலாற்றாசிரியரான H.G.Wells தனது நூலில், ‘முதல் முதலில் கிரேக்கரே தத்துவ விசாரணையை ஆரம்பித்தனர். அவர்களுக்குப் பின்னர் அரேபியர் அம் முறையைத் தொடர்ந்தனர். அரிஸ்டோடில் விதைத்த தத்துவம், அலெக்ஸாந்திரியாவில் புகழ்பெற்ற நூதனசாலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. இவை அரேபியரின் எழுச்சிக்குப் பின்னரே முளைவிட்டு பழம் தரத் துவங்கின(4) என்று குறிப்பிடுகின்றார்.
அழிவின் விளிம்பிலிருந்த அறிவியலை முஸ்லிம்கள் பாதுகாத்திருக்காவிட்டால் பழம் பெரும் அறிவியல் முதுசங்கள் பல இன்றை உலகுக்குக்கிடைக்காது போயிருக்கலாம். அழிவிலிருந்து அறிவியலைப் பாதுகாத்தமை முஸ்லிம்கள் அறிவியல் உலகுக்குச் செய்த மிகப் பெரும் சேவையாகும். இது குறித்து பேராசிரியர் Stanislas Guyand அவர்கள் தனது Encyceopadie des science religieusus என்ற ஜேர்மனிய நூலில்,
‘மத்தியகால வரலாறுகளிலேயே இஸ்லாத்தின் வரலாறு நாகரிகத்தின் வரலாறாகவே விளங்குகிறது. புறக்கனிக்கப்பட்ட கிரேக்க விஞ்ஞானத்தையும் தத்துவ சாத்திரங்களையும் அழிவிலிருந்து பாதுகாத்து, மேற்குலகை எழுச்சிபெறச் செய்து அறிவியக்க வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களாக இருந்ததற்காக நாம் முஸ்லிம்களுக்கு மிகவும் கடமைப்படடுள்ளோம். ஏழாம் நூற்றாண்டில் பழைய உலகம் மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது அரேபியர்கள் பெற்ற வெற்றி இந்த உலகில் புதிய குருதியைப் பாச்சியது.’ என்று குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்டதொரு கூற்றல்ல.
இதே கருத்தை C.E. Storss என்ற அறிஞர் Many Greeds -One cross என்ற நூலில்,
‘இருள் அடைந்திருந்த யுகத்தில் விஞ்ஞானம், தத்துவம் போன்ற ஒளிச்சுடர்களை உயரப்பிடித்திருந்த பெருமை அரேபிய முஸ்லிம்களையே சாரும். அவர்களே அரிஸ்டோட்டில், பிளேட்டோ, இயுக்லித் தொலமி ஆகியோரின் நூல்களை அறபு மொழியில்பெயர்த்து பாதுகாத்தனர். அவர்களாலேயே இந்நூல்களை மறுமலர்ச்சிக்காலத்தில் ஐரோப்பியரும் தத்தம் மொழிகளில் பெற்றுக்கொள்ள முடிந்தது’
என்று குறிப்பிடுகின்றார்.
அன்று அரேபியர் ஏற்படுத்திய அறிவியல் எழுச்சிதான் இன்றைய ஐரோப்பாவின் அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது என்பதை மேற்படி கூற்றுக்கள் உறுதி செய்கின்றன. அன்றைய அவர்களது அறிவியல் தாக்கம் இன்றுவரை வியாபித்துள்ளததைக் காணலாம். இதனைப் பின்வரும் கூற்று உறுதிப்படுத்துகின்றது.
‘ஐரோப்பாவில் லௌகீகத் துறையிலும் ஆன்மீகத் துறையிலும், அறியாமை இருள் சூழ்ந்திருந்தபோது ஸ்பெயின் முஸ்லிம்கள் சிறப்பு வாய்ந்த நாகரிகத்தையும் ஸ்தீரமான பொருளாதார வாழ்க்கையையும் அமைத்திருந்தார்கள். கலை, விஞ்ஞானம், தத்துவம், கவிதை முதலிய துறைகளின் வளர்ச்சியில் முஸ்லிம் ஸ்பெயின் பெரும் பங்கெடுத்தது. அவர்களின் கருத்துக்களின் செல்வாக்கு 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் அக்யனாஸ், தாந்தே போன்ற தத்துவ ஞானிகளின் சிந்தனைகளையும் தாக்கத் தவறவில்லை. முஸ்லிம் ஸ்பெயின் ஐரோப்பாவின் ஒளிவிளக்கைப் போல விளங்கியது. (5)
இக்கூற்று அன்றைய அவர்களது அறிவியல் எழுச்சியின் தாக்கம் நீண்ட நெடிய வரலாறுடையது என்பதையும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சித் தொட்டிலாக திகழ்ந்தது ஸ்பெயினே என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
இறுதியாகவும் ஒட்டுமொத்தமாகவும் முஸ்லிம்கள் அறிவியல் துறைக்காற்றிய பங்குபற்றிக் கூறுவதாயின், பேராசிரியர் பிலிப் கே. ஹிட்டி History of Arabs எனும் தனது நூலில் கூறுவது போன்று ‘மத்திய கால ஆரம்பத்தில் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியவர்கள் அரேபியர்களைப் போல வேறு எவரும் இல்லை’ என்று கூறலாம்.
அறிவியல் துறையில் இவ்வாறு எழுச்சி பெற்ற முஸ்லிம்கள் அத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதையும் ஓரளவு விரிவாக விளங்கிக்கொள்வது மேற்குறித்த கூற்றுக்களின் உன்னதத் தன்மையை உணர்ந்து கொள்ள வழிவகுக்கும். இவ்வகையில் முஸ்லிம்களின் அறிவியல்துறை சாதணைகள் பற்றி இங்கு நோக்கப்படுகிறது.
மருத்துவம்:
முஸ்லிம்கள் வளர்த்த அறிவியல் துறையில் மக்கள் வாழ்வுடன் மிக நெருங்கிய தொடர்புடைய மருத்துவம் முதன்மையானதாகும். கலீபா மாமூனின் காலத்தில் (மரணம் 833) தோற்றுவிக்கப்பட்ட பைத்துல் ஹிக்மா எனும் அறிவகத்தால் கிரேக்க மருத்துவ நூற்கள் சிரிய, அரேபிய மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. கிரேக்க அறிஞர்களான கலன், ஹிபோகிரட்ஸ் போன்றோரின் நூற்கள் ஜிர்ஜிஸ் பின் ஜிப்ரீல் இப்னு பக்ரிசு (மரணம் 771), யுஹன்னா இப்னு மஸாவேஹ் (மரணம்857), அலி அத்தஹு, பரினைன் இப்னு இஸ்ஹாக் (மரணம் 877) ஈஸா இப்னு யஹ்யா, தாபித் இப்னு குற்றா(மரணம் 901) போன்ற அறிஞர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டன. இதன் மூலம் கிரேக்க மருத்துவ அறிவியல் பாதுகாக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக உடற்கூறு பற்றி கலன் எழுதிய ஏழு நூல்களைக் குறிப்பிடலாம். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இந்த நூற்கள் கால வெள்ளத்தால் அழிந்து போயின. எனினும், அறபு மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட மொழி பெயர்ப்புக்கள் மூலமாகவே இந்நூல் பற்றி இன்று அறிய முடிகின்றது. இது மொழிபெயர்ப்புக்கள் மூலம் கிரேக்க அறிவியல் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றது.
முஸ்லிம்கள் வெறும் மொழிபெயர்ப்பாளர்களாக மட்டுமன்றி சொந்த ஆய்வுகளையும் இத்துறையில் வெளியிட்டனர். இவ்வகையில் அலி அத்தபரி எழுதிய ஷபிர்தவ்ஸ் அல்ஹிக்மா’ எனும் நூல் குறிப்பிடத்தக்கது. இன்று கிடைக்கும் மிகப்பழைய அறபு மருத்துவ நூற்களில் இதுவும் ஒன்றாகும். பிரபல மொழிபெயர்ப்பாளாரான ஹுனைன் இப்னு இஸ்ஹாக் என்பவரும் ஷகிதாப் அல் மஸாஇல் பில் ஜன்’ எனும் கண் மருத்துவம் பற்றிய நூலை எழுதினார். கண் நோய் பற்றி இன்று கிடைக்கும் அறபு மொழியிலான மிகப்பழைய நூல் இவரது நூலே என்பர். தாபித் இப்னு குர்ராவும் ஷஅல்ழாஹிரா பீ இல்மித்திப்’ என்ற மருத்துவ நூலை எழுதினார். இவரது மருத்துவ நூல் 31 பிரிவுகளாக அண்மையில் எகிப்தில் வெளியிடப்பட்டது. (6)
கிரேக்கர்களின் யூனானி மருத்துவ முறையை இன்றைய உலகுக்கு அளித்த பெருமை முஸ்லிம்களையே சாரும் என்பதை அனைவரும் அறிவர். ஆனால், அதுமட்டுமன்றி மேலைநாட்டு மருத்துவத்தின் தந்தையாகவும் முஸ்லிம்கள் திகழ்ந்தார்கள் என்பது பலரும் அறியாததாகும். மேலைநாட்டு மருத்துவத்தில் முஸ்லிம் மருத்துவ அறிஞர்கள் பலர் செல்வாக்கு செலுத்துகின்றனர். இவர்களுள்,
* அல்ஹாவி, அல் ஜுதரி, வல்ஹஸ்பா, கிதாபுத் திப்பி அல் மன்சூரி போன்றே நூல்களைத் தந்த அர்ராஸி(865-925). இவரது அல் ஹாவி என்ற நூல் ஷ17ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மருத்துவக் கல்லூரிகளில் பாடநூலாகப் பயன்படுத்தப்பட்டது என J.D. Bernal தனது Sciecnec is History என்ற நூலில் குறிப்பிடுகிறார். (7)
* மருத்துவ உலகின் பைபிள்(8) என்று போற்றப்படும் ஷகானூன்பித்திப்பி’ எனும் அதிகமான மக்களால் வாசிக்கப்பட்ட(9) மருத்துவ நூலைத் தந்த அலி இப்னுஸீனா(980 -1037) போன்ற பலரைக் குறிப்பிடலாம்.
இங்கு முஸ்லிம்கள் அறிவியல் உலகுக்குச் செய்த பணிகளைக் கூறுவது நோக்கமல்ல. அது ஆய்வுப் பணியின் பரப்பை விரிவாக்கிச் செல்லும். ஒட்டுமொத்தமாக முஸ்லிம் மருத்துவர்கள் மருத்துவத் துறைக்கு ஆற்றிய பங்கைத்தெளிபடுத்த பிரபல ஆங்கில நாட்டு வரலாற்றாசிரியர் H.G. Wells தனது The Out Line of History என்ற நூலில் குறிப்பிடும் பின்வரும் கூற்று போதுமானது.
‘மருத்துவத்துறையில் அவர்கள் மிகப்பெரும் அபிவிருத்தியை ஏற்படுத்தினார்கள். அவர்களின் மருத்துவ நூல் இன்றைய மருத்துவ நூலைப்போன்றே இருந்தது. அவர்களின் சிகிச்சை முறைகைள் பல இன்னும் எம்மிடையே உபயோகத்தில் இருக்கின்றன. அவர்களின் அறுவை மருத்துவர் மயக்க மருந்துகளின் உபயோகத்தைப் பற்றி அறிந்திருந்ததோடு, மிகச்சிக்கலான அறுவைச்சிகிச்சைகளையும் நிறைவேற்றினர். ஐரோப்பாவில் சமயச் சடங்குகளாலேயே நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று நம்பிச் செயலாற்றிய மதபீடத்தால் மருத்வத் தொழில் தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் அரேபியர்கள் உண்மையான மருத்துவ முறையைப் பின்பற்றினர்.’(10) இக்கூற்று முஸ்லிம் உலகு மருத்துவத்துறையில் அடைந்திருந்த முன்னேற்றத்தையும் அப்போதைய ஐரோப்பாவின் அறியாமையையும் எடுத்துக்காட்ட போதுமானது.
இரசாயனவியல்:
அறிவியல் துறையின் தலையாயதாகக் கருதப்படும் இரசாயனவியலைக் குறிக்கப் பயன்படும் கெமிஸ்ட்ரி (Chemistry) எனும் ஆங்கிலப் பதம் ஷகீமிய்யா’ எனும் அரபுச் சொல்லின் திரிபாக இருப்பது ஊடாக இத்துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய அளப்பரிய பங்கை ஊகிக்க முடிகிறது. எகிப்து நாட்டின் மண் கருமைத் தன்மையுடையதாக இருந்தது. இக்கலை அங்கு கண்டுபிடிக்கப் பட்டமையால் கீமிய்யா என்று பெயர் பெற்றது.
இக்கலையில் ஆய்வுகள் செய்த முஸ்லிம்கள் இரும்பை அதன் தாதிலிருந்து முகர்ந்து உணரவும், நிறக்கண்ணாடியைத் தயாரிக்கவும், தோல்களைப் பதனிடவும், மருந்து சாதனங்களைப் பெறவும், தாவரங்களிலிருந்து சாயங்களைப் பெறவும், வாசனைப் பொருட்களை உற்பத்தி செய்யவும் அறிந்திருந்தனர் என N. Glinka தனது General Chemistry என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
இத்துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு பற்றி E.J. Holmyard குறிப்பிடுகையில், இரசாயனத்துறையில் பரிசோதனைகள் செய்து அவற்றின் மூலம் இரசாயனத் தன்மைகளை உறுதிப்படுத்துவது கீரேக்க நாட்டில் அறியப்படாமலேயே இருந்து வந்தது. ஆனால், விஞ்ஞானத்தில் பரிசோதனைகள் செய்து ஆராயும் முறை அக்கால முஸ்லிம் விஞ்ஞானிகளின் மகத்தான சாதனையாகும். இராசாயனத்துறையில் அரேபியர்கள் எத்தகைய ஆதிக்கம் செலுத்தினர் என்பதற்கு அறபு மூலத்திலிருந்து வந்த பல இரசாயனவியல் பதங்கள் இன்னும் சான்று பகர்கின்றன. எனக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் இத்துறையில் பல ஆய்வுகளைச் செய்து எரிகாரம் போன்ற பதார்த்தங்களைக் கண்டுபிடித்ததுடன் பல உத்திகளைக் கையாண்டு இதனை வளர்த்தனர். இத்துறையில் காலித் இப்னு யசீத், இப்னு ஹய்யான், ஜாபிர்; அலி இப்னு சீனா, அப்துல்லாஹ் அல் காஸாஸீ போன்ற பல அறிஞர்களும் ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர்.
முடிவாகக் கூறுவதாயின் ஹம்போல்ட் கூறுவது போல ‘தற்கால இரசாயனவியல் சந்தேகமின்றி முஸ்லிம்களின் கண்டுபிடிப்பேயாகும். இத்துறையில் அவர்கள் பெற்ற அடைபேறுகள் கவனத்தை ஈர்ப்பனவாக அமைந்திருந்தன’ (11) என்று குறிப்பிடலாம்.
வானவியல்:
முஸ்லிம்கள் பிரகாசித்த அறிவியல்துறைகளில் வானவியலும் ஒன்றாகும். இந்திய, கிரேக்க வானவியல் நூல்களை மொழிபெயர்த்து கற்றதோடு தமது ஆய்வுமுயற்சிகளையும் முஸ்லிம்கள் முடுக்கிவிட்டனர். மிகக்குறுகிய காலத்திலேயே முஸ்லிம் உலகில் பல வானியல் ஆய்வாளர்கள் உருவாகினர். அவர்கள் வானவியல்துறையில் அதுவரைகாலம் நிலவி வந்த தவறான கருத்துக்களை விமர்சிக்கவும் தயங்கவில்லை. கலீபாக்களின் உதவியுடன் பல்வேறு இடங்களில் வானவியல் ஆய்வு நிலையங்களும் நிறுவப்பட்டன.
முஹம்மத் அல் பஸாரி, யாகூப் இப்னு தாரிக், அல் குவாறிஸ்மி (780-850), அலி இப்னு ஈஸா, அல் பர்கானி, அல் மஹானி, பனூ மூஸா, அபூ மஃ’ர் போன்ற பல அறிஞர்கள் இத்துறையில் பல நூல்களையும் ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளனர்.
கணிதம்:
நாகரிகத்தின் கண்ணாடியாகவும், பிரயோக விஞ்ஞானத்தின் தாயாகவும் கருதப்பட்ட கணிதத்துறைக்கு முஸ்லிம்கள் பெரியளவில் பங்காற்றியுள்ளனர். கிரேக்கர்களின் கணிதத்தை எடுத்து அவற்றை மெருகூட்டி இன்றைய உலகுக்கு வழங்கியவர்கள் முஸ்லிம்களே. உரோம எண்களைப் போட்டுக் குழம்பிப்போயிருந்த மேற்குலகுக்கு 1, 2, 3 என்று அழைக்கப்படும் (English Numbers) எனத்தவறாகக் குறிப்பிடப்படும் இலக்கங்களை முஸ்லிம்களே அறிமுகப்படுத்தினர். ஸைபஃர் என்னும் பூஜ்யத்தை அறிமுகப் படுத்தியதன் மூலம் எண்முறை கணிதத்தை (Arithmetic) அறிமுகப்படுத்தியதும் முஸ்லிம்களே. பூஜ்யத்தைக் குறிக்கப்பயன்படும் Zero என்ற ஆங்கிலச் சொல் Sifr எனும் அரபுச் சொல்லின் திரிபாக இருப்பது இதனையே உணர்த்துகின்றது.
அல்ஜிப்றா எனும் பெயரால் அழைக்கப்படும் அட்சரகணிதத்தைக் கண்டுபிடித்தவர்களும் முஸ்லிம்களே. அதுமட்டுமன்றி திரிகோண கணிதம், தளக் கேத்திரகணிதம், பரப்புக்கேத்திரகணிதம் போன்றவற்றைக் கண்டுபிடித்தவர்களும் முஸ்லிம்களேயாவர்.
இத்துறைக்கு, குவாறிஸ்மி (780-850), அல்கிந்தி(803-873), தாபித் இப்னு குரா(826-901), அல் பத்தாஸீ(850-929), அபூ காமலில்(850-960), அபுல் வபா(940-998), இப்னு ஹைதம்(965-1039) போன்ற அறிஞர்கள் இத்துறையில் ஆய்வு நூல்களை வெளியிட்டனர்.
அடிக்குறிப்புக்கள்
1. அல் குர்ஆன் 7:157, 158
2. அல் குர்ஆன் 62:02
3. அபூபக்கர் ஏ.எம், அறிவியல் வளர்த்த முஸ்லிம்கள்,
முனீரா பப்ளிகேஷன்ஸ், காத்தான்குடி – 1980 பக்.04
4. மேலது, பக்.05
5. மேலது, பக்.06
6. M.I.M. அமீன் (கட்டுரை)
முஸ்லிம் உலகின் மருத்துவத்துறை பங்களிப்பு ஒரு வரலாற்று நோக்கு,
அல்ஷிபா -97
7. அபூபக்கர் ஏ.எம், மேலது பக்.32
8. மேலது, பக்.48
9. மேலது
10. மேலது பக்.28
11. M.A. Hanifa,
A Surrvery of Muslim Institution and Culture p.204

May 28, 2011

ஷெய்க் உஸாமா பின் லாதின் ஒரு ஆவணம்

OurUmmah.org


 
முஸ்லிம் உம்மாவின் சிங்கம் என்று வர்ணிக்கப்படும் ஷெய்க் அஷ் சஹீத் உஸாமா பின் லாதின் தொடர்பாக்க பலரும் பல கதைகளை சொல்லிவருகின்றனர் அந்த கதைகளில் பல கதைகள் மேற்கு உளவு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட கதைகளும் மிடியாக்களில் உலா வரும் வேலை இன்னும் பலரும் ஊகங்களின் அடிப்படையிலும் கதைகளை சொல்லிவருகின்றனர் இந்த வேளையில் அல் ஜெஸீரா தொலைக்காட்சி அவர் பற்றிய சிறிய ஆவணம் ஒன்றை தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளது அந்த ஆங்கில ஆவணம் இங்கு பதிவு செய்யப்படுகின்றது.
அந்த ஆவணத்தில் தன்சானியா , கென்யா அமெரிக்கா தூதரகங்களை தாம் தகவில்லை என்ற ஷெய்க் உஸாமாவின் மறுப்பு பதிவாகியுள்ளதுடன் அவர் எந்த மதத்துக்கோ இனத்துக்கோ, ஆங்கிலேயர்களுக்கோ எதிரானவர் அல்லர் ஆனால் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்ளைக்கு எதிரானவர் என்று அவர் தெரிவித்ததும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பானது அதேவேளை அஷ் சஹீத் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் அஸ்ஸாம் ஆப்கானிஸ்தானில் அவரின் ஜும்மாஹ் குத்பாவின் பின்னர் அவரின் குழந்தைகளுடன் கொல்லப்பட்டமை தொடர்பில் CIA, மொசாட் ஆகியவற்றுடன் மிக பிரதான சூத்திரதாரியாக ரஷிய KGB யும் சந்தேகிக்கப்பட்டமை சுட்டிகாட்டப் படவேண்டிய விடயமாகும்,  அல் ஜெஸீரா தொலைக்காட்சியின் இந்த ஆவணம் ஓரளவு நடுநிலை பார்வையை வழங்குகின்றது.



கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை

OurUmmah.org


கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்ற படும் போது
M.ஷாமில் முஹம்மட்
இன்று 3.3.2010 இதே திகதியில் 3.3.1924 ஆம் ஆண்டு திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டது மேற்கு கண்ட கனவு நிஜமானது முதல் சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்களிடம் தேற்றவர்கள் இரண்டாம் சிலுவை யுத்தத்தின் மூலம் இஸ்லாமிய சாம்ராஜியத்தை வெற்றி கொண்டனர் இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த சாம்ராஜ்யம் தேசியவாதம் என்ற மேற்கின் விஷம் ஊட்டப்பட்டு  கோமா நிலையில் போடப்பட்டது, இன்று குற்றுயிரும் குறைஉயிருமாக துடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த வேளையில் முஸ்லிம் உம்மாஹ் கிலாபத்தை இழந்து இன்றுடன் 86 ஆண்டில் கால் பதிக்கின்றது.
மேற்கு தனது நாசகார மந்திரமான “ஒற்றுமையை பிரிவினையாக உருமாற்றி தேசத்தை கைபற்று” என்ற மந்திரத்தை தனது கிருஸ்தவ மிஷனெரிகள் மூலமும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமும் தேசியவாதம் என்ற கொடியின் கீழ் வெற்றிகரமாக செயல்படுத்தி முஸ்லிம் தேசத்தை துண்டுகளாக உடைத்து, உடைக்கப்பட்ட பகுதிகளை மேற்கு தனது இராணுவ ,மற்றும் நாகரீக கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்தது பலமான முஸ்லிம் உம்மாஹ் என்ற கட்டமைப்பை உடைந்தது முஸ்லிம்கள் பலம் இழந்தனர் முஸ்லிம் உம்மாஹ் தேசிய வாதம் என்ற கொடிய விஷம் ஊட்டப்பட்ட சமூகமானது. விரிவாக பார்க்க1,2

கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 ஆண்டுகள் தான் கடந்துள்ளது மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மாஹ்வை பலவீன படுத்தி முஸ்லிம் உம்மாஹ்வின் முதுகில் ஏறி ருத்ர தாண்டவம் ஆடுகிறது 3.3.1924 ஆம் ஆண்டு துருகியில் முஸ்தபா கமால் அதாதுர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகி  என்று வர்ணிக்கப்படும் நபரை பயன்படுத்தி ஐரோப்பியர் 13 நூற்றாண்டுகளாக பலத்துடனும் பலவீனத்துடனும் ஏதோ ஒருவகையில் உலகில் நிலை பெற்ற இஸ்லாமிய கிலாபத்தை விழ்த்தினர் , அழித்தனர் இதற்கு முன்னர் 1908ல் துருக்கியில் மேற்கின் ஆதரவுடன் துருக்கி தேசிய வாலிபர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது இவர்கள் இஸ்லாம் என்ற அடையாளத்தை முதன்மை படுத்தாமல் மேற்கின் பிரித்தாளும் தத்துவமான  தேசியவாதத்துக்கு முன்னுரிமை வழங்கி துருக்கியில் கலகம் செய்யதனர் அதற்காகவே மேற்கு சக்திகளால் உருவாக்கப்பட்டனர் இந்த கலகத்தில் இவர்களின் கை ஓங்கியது நிர்பந்தங்களின் காரணமாக கிலாபத் அரசு ஒப்பந்தங்களுக்கு இணங்கியது ஒப்பந்தங்களின் ஊடாக துருக்கி தேசிய வாலிபர் அமைப்பு கிலாபத் அரசாங்க நிர்வாகத்தினுள் புகுந்தது இவர்களின் செல்வாக்குடன் துருக்கிய தேசியவாதம் என்ற குறுந் தேசிய விஷம் முஸ்லிம் சமுகத்திற்குள் புகுந்தது.
துருக்கி நிர்வாகத்திற்குள் புகுந்த இவர்கள் 240 உறுபினர்களை கொண்ட ஒஸ்மானிய மந்திரி சபையில் கலீபா இரண்டாவது அப்துல் ஹமீது என்பவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தீர்மானம் ஒன்றை கொண்டுவர அழுத்தங்களை பிரயோகித்தனர் ஏற்கனவே பல வெளிநாட்டு கிலாபத்தின் எதிரிகளின் படை எடுப்பால் திட்டமிட்டு சிதைக்கப் பட்டுகொண்டிருந்த கிலாபத், மேற்கு வெளிநாட்டு முகவர்களின் உள்நாட்டு சதிகளால் 27 ஏப்ரல் 1909 இல் கலீபா அப்துல் ஹமீது கலீபா பதவியில் இருந்து அகற்றபட்டார் இந்த தீர்மானத்தை கொண்டுவர பிரதான காரணமாக அமைந்தவர்கள் மேற்கின் உருவாக்கமான துருக்கி தேசிய வாலிபர் அமைப்புத்தான் இந்த அமைப்பில் யூதர்கள் பலர் அதன் நிர்வாக பிரிவில் இருந்தார்கள் என்பது குறிபிடதக்கது .
1901 இல் கலீபா அப்துல் ஹமீதின் கிலாபத்தின் போது யூதர்கள் பொருளாதார பலத்தை பண்படுத்தி பலஸ்தீனத்தின் நிலங்களை அபகரித்து கொண்டிருந்த போது இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொண்ட சுல்தான் அப்துல் ஹமீது யூதர்களுக்கு நிலங்களை விற்பதை தடை செய்து கட்டளை வெளியிட்டார் . சியோனிஸ கனவுக்கு தடையாக அமைந்ததை கண்ட யூதர்கள் தமது யூதர்களின் பலம் பொருந்திய குழு ஒன்றின் ஊடாக கலீபா அப்துல் ஹமீதை சந்திக்க முற்பட்டனர் ஆனால் அவர்களை கலீபா சந்திக்க மறுத்து விட்டார் எனிலும் இவர்கள் தமது கோரிக்கையை வேறு வழியில் முன்வைத்தனர் இதன் படி குறித்த சட்டத்தை விலக்கிக் கொண்டு ஜெருசலத்தில் யூதர்கள் வாழ்வதற்கு இடம் கொடுத்தால் சாம்ராஜியத்தின் அத்தனை கடன்களையும் அடைத்து விடுவதாகவும் வட்டி இன்றி பொருளாதார உதவிகளை அளிப்பதாகவும் கூறினர் அதற்கு கலீபாவின் பதில் இவ்வாறு இருந்தது ‘பலஸ்தீனம் என்னுடைய பரம்பரை சொத்தல்ல, நான் நினைத்த மாதிரி கொடுப்பதற்கு, இது முஸ்லீம்களின் தேசம் கலீபா உமர் காலத்தில் இருந்து முஸ்லிம்களின் பரம்பரை தேசம் . இந்த பகுதி முழுவதும் முஸ்லீம்களின் குருதி சிந்தி இருக்கிறது . பலஸ்தீன மண்ணில் ஒரு பகுதியை கொடுப்பதை விட என் சதையின் ஒரு பகுதியை வெட்டி கொடுப்பது எனக்கு எளிதாக இருக்கும். என்னுயிர் உள்ள வரை கட்டளை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது’ என்று தெளிவாக சொன்னார்கள்.
இந்த சம்பவம் யூதர்களுக்கு மேலும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு எதிராக மேற்குடன் சதி நாச வேலைகளை செய்யவும் மேற்கு இவர்களை பயன்படுத்தவும் ஏதுவாக அமைந்தது என்று குறிபிடலாம் 27 ஏப்ரல் 1909 இல் கலீபா அப்துல் ஹமீது கலீபா பதவியில் இருந்து அகற்றப்பட்டார் இந்த தீர்மானத்தை கலீபா முன் சென்று நான்கு நபர்கள் வாசித்தனர் இவர்களில் இருவர் முஸ்லிம்கள் மற்ற இருவரில் ஒருவர் எமானுவேல் கரசா என்ற யூதன் இந்த கட்டம் மிக தெளிவாக மேற்கினதும் யூதர்களினதும் சதியை காட்டுகின்றது இது யூதர்களின் பலி வாங்கும் சந்தர்பமாக இருந்தது கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்றபட்ட பின்னர் பிரிட்டன் அதிபர் பெல்பௌர்- belfour- 1917 ஆம் ஆண்டில் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க பிரிட்டன் ஆயத்தங்களை செய்வதாக பிரகடனபடுத்தினார் என்பது குறிபிடதக்கது இது யூதர்கள் இஸ்லாமிய சாம்ராஜியத்தை அழிக்க உதவியதற்கு நன்றிகடனாக இருக்கலாம்.
27 ஏப்ரல் 1909 ஆம் ஆண்டில் கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்றபட்ட பின்னர் துருக்கி தேசிய வாலிபர் அமைப்பு தனது பிடியை படிப்படியாக இருக்க தொடங்கியது 240 உறுபினர்களை கொண்ட ஒஸ்மானிய மந்திரி சபை அப்துல் மஜீத் என்ற கலீபாவை 1922 இல் நியமித்தது இவர்தான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இறுதி கலிபாவாக பார்க்கப்படுகின்றார் முஸ்தபா கமால் என்ற மேற்கின் பொம்மை துருக்கி நாட்டின் அதிகாரத்தினை கையில் எடுத்தவுடன் மிகவும் வேகமாக கிலாபத் அழிப்பை தொடங்கியது , 1924 கலீபா அப்துல் ஹமீது பதவியில் இருந்து அகற்றபட்டார் இறுதியாக இருந்த கிலாபத்தின் எச்சசொச்சங்கள்   3.3.1924 உலகில் இருந்து அகற்றபட்டது கிலாபத் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதே நாள் கலீபா குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் 3.3.1924 அன்று மேற்கின் சதிநாச வேலைகளால் கிலாபத் அழிக்கப்பட்ட பின்னர் அன்றைய பிரிட்டிஷ் வெளிநாட்டு செயலாளர் லோர்ட் குர்சொன் – Lord Curzon- பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இப்படி கூறினான் “இந்த விவகாரத்தில் முக்கிய விடையம் என்னவென்றால் துருக்கி அழிக்கபட்டுகொண்டிருகின்றது அது மீண்டும் ஒரு போதும் எழுச்சி பெறாது காரணம் துருக்கியின் ஆத்மாத்த பலமான கிலாபத்தையும் , இஸ்லாத்தையும் நாம் அழித்து விட்டோம்” என்றான்.
கிலாபதின் இறுதி அழிப்புபை செய்தவன் முஸ்தபா கமால் என்ற துரோகி இவன் வெறும் கிலாபத் அழிப்புபை மட்டும் செய்யவில்லை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் புதிய சந்ததியை இஸ்லாம் என்றால் என்ன என்று கேட்க வைக்கும் அளவிற்கு முஸ்லிம் சமுகத்தில் இருந்து இஸ்லாத்தை மிகவும் அந்நியபடுத்த தேவையான மேற்கில் இருந்து இறக்குமதியான திட்டங்களை அமுல்படுத்தினான் என்று வரலாறு குற்றம் சாட்டுகின்றது .
கிலாபத் கலைக்கபட்டதாக அறிவிக்கப்பட் பின்னர் முஸ்தபா கமால் இஸ்லாத்துக்கு எதிரான அத்தனை சட்டங்களையும் அமுலுக்கு கொண்டு வந்தான் நாடு பூராவும் அரை நிர்வாண முழு நிர்வாண பெண்களின் நடன விடுதிகளை ஆரம்பித்தான் இதை எதிர்த்து கருத்து சொன்ன ஒரு புத்திஜீவியை தனது கை தடியால் அடித்து துரத்தியதுடன் அல்குர்ஆன் பிரதி ஒன்றாலும் அவர் மீது வீசி எறிந்தான் அரபு மொழியை முழு அளவில் தடை செய்தான் , அரபு கற்க முற்பட்டால் தேச துரோகமாக அறிவித்தான் , அரபு மொழியில் பாங்கு சொல்வதை தடை செய்தான் இஸ்லாமிய உடையை தடை செய்தான் , எதிர்க்கும் மனிதர்களை , கொலை செய்தான் சிறையில் அடைத்தான், நாடு கடத்தினான் எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் என்று சொல்வதை தடை செய்தான் அல்லாஹ் என்று சொல்லுக்கு பதிலாக “தன்றி” -Tanri-என்ற சொல்லை அறிமுகபடுத்தினான் அல்லாஹு அக்பர் என்று சொன்னதுக்காக பலரை சிறையில் அடைத்தான் ஒரு சமயம் மஸ்ஜிதின் மினாரா ஒன்றில் இருந்து வந்த பாங்கு தனது இசை நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவித்தாதாக கூறி அந்த மஸ்ஜிதின் மினாராவை இடித்து தகர்த்தான்.
அரபு எழுத்துகளை பாவிப்பதை தடை செய்தான் , ஒரு தடவை தான்தான் இறைவன் என்று கூட கூறினான் முஸ்லிம் பெண்களை ஐரோப்பிய வெறியர்கள் முன் நிர்வாணமாக ஆடவிட்டு ரசித்தான் பெண்களை காம நடன நங்கைகளாக உருவாக்க பாடசாலைகளை உருவாக்கினான் மேற்கு காமநடன ஆசான்கள் இவர்களுக்கு கற்பித்தனர் பால் கவர்ச்சியை தூண்டும் உடைகளை உடுத்தவும் தைக்கவும் மேற்கு ஆசான்கள் கொண்டுவரபட்டனர் இஸ்லாத்துக்கும் அடுத்த சந்ததிக்கும் உள்ள அணைத்து தொடர்பு களையும் மேற்கின் உதவியுடன் துண்டித்தான் ஒரு தடவை இவன் தனது இராணுவ சிப்பாயை பார்த்து who is God where does he live ? இறைவன் யார் அவன் எங்கு இருக்கின்றான் என்று கேட்டான் அதற்கு அந்த இராணுவ சிப்பாய் முஸ்தபா கமால் பாஷா இறைவன் அவர் அங்கோர வில் இருக்கின்றார் என்று பதில் சொன்னதாக ஒரு பதிவு இருக்கிறது.
இங்கு கவனிக்க பட வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது முஸ்தபா கமால் பாஷா தான் அதிகாரத்துக்கு வரமுன்னர் ஐந்து வேலை தொழுபவனாக , நோன்பு நோற்பவனாக , ஹஜ் செய்பவனாக, அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்பவனாகவும் இருந்தான் அதிகாரம் கைக்கு வந்தவுடன் நேர் மாறாக மாறினான் இந்த சடுதியான மாற்றம் இவனின் உண்மையான உருவத்தை வெளிக்காட்டியது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
இவன் இஸ்லாத்தை தழுவியவர்கள் போல் நடித்த அல்லது இஸ்லாத்தில் சில பகுதிகளையும் யூத மதத்தில் சில பகுதிகளையும் பின் பற்றும் ஒரு யூத கோத்திரம் ஒன்றை சார்ந்தவன் இவனில் கோத்திரம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த சலோனிக்க Salonika என்ற தேசத்தை சேர்ந்தது இவர்களில் 1913 இல் 300 யூத குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவியதாகவும் அவர்கள் இஸ்லாத்தை தழுவினாலும் யூத மத வழிபாடுகளை தொடர்ந்தும் செய்து வந்ததாகவும் வரலாறு கூறுகின்றது இவர்கள் முஸ்லிம்களால் திம்மிகள் Doemeh-என்று அழைக்க பட்டதாகவும் , முஸ்லிமகள் போன்று இஸ்லாமிய கடமைகளில் முனைப்பாக இருந்ததாகவும் ஆனால் முஸ்லிம் பெண்களை இவர்கள் கண்டிப்பாக திருமணம் முடிக்க கூடாது என்ற யூத கொள்கையில் இருந்ததாகவும் வரலாறு கூறுகின்றது முஸ்தபா கமால் பாஷா மற்றும் நிதித் துறை அமைச்சராக அதிகாரத்தில் இருந்த ஜாவிட் பெய்யும் – Djavid Bey- இந்த யூத திம்மி – Doemeh-பிரிவை சார்ந்தவர்கள் என்பது வரலாறு இப் போது சில விடையங்கள் உறவு முறைகள் தெளிவாக தெரிகின்றது – The Secret Jews by Joachim Prinz 1973,pp. 111-122-
இது யூத சியோனிச வாதிகள் எப்போதும் மிகவும் கடமை உணர்வுடன் யூத தேசத்துக்காக இயங்கிகொண்டிருந்ததைதான் காட்டு கின்றது யூதர்கள் மேற்குலகுடன் இணைந்து தாம் நினைத்ததை சாதித்தார்கள் இன்றும் மேற்கு உலகின் சிந்தனையை தீர்மானிக்கும் சிந்தனை சாரதிகளாக உருவாகியுள்ளனர் நாம் கிலாபத்தை இழந்து ௮௬ வருடங்களை அடைந்தும் கிலாபத்துக்கு என்ன நடந்தது என்பதை பாடசாலையில் உயர்தர வகுப்பில் இஸ்லாமிய நாகரிகம் என்ற பாடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூறப்படும் சம்பவங்களை பற்றி மட்டும் தெரிந்துகொண்டு இஸ்லாமிய கிலாபத் தின் வரலாற்றை தவறாக விளங்கி கொள்கின்றோம் அல்லது அவை எமக்கு எந்த உணர்வு பூர்வமான அறிவையும் தராமல் வெறும் சில தகவல்களை அதுவும் முஸ்லிம்களின் ஒற்றுமை இன்மை பற்றிய செய்திகளை மட்டும் எமக்கு போதிக்கும் பாடமாக இருக்கிறது
கிலாபத் இன்றி முஸ்லிம்கள் சறுகுகளை போன்று எந்த பலமும் இன்றி இருகின்றனர் முஸ்லிம்கள் தொகையில் அதிகம் , வளத்தில் அதிகம் , பணத்தில் அதிகம் ஆனால் ஒரு தலைமைத்துவம் இன்றி சறுகுகளை போன்று எந்த பலமும் இன்றி இருகின்றனர் எங்கும் அடிவாங்கும் வரலாறு எதிலும் பின்னடைவு
உலக மக்கள் தொகையில், 19.2 வீதம் முஸ்லிம்கள் எனவும், 17.4 வீதம் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வத்திகான் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.
இன்று உலகில் யூதர்கள் 140 லட்சம் பேர் இந்தோனேசியாவில் மட்டும் முஸ்லிம்களின் தொகை 19 கோடி. இதுதான் உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு ,உலகில் முஸ்லிம்கள் தொகை 150 கோடிக்கு மேல்  உலக  அளவில் மக்கள் தொகையில் ஐவரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறான் முஸ்லிம் நாடுகள் காம்பியாவில் இருந்து இந்தோனேசியா வரை 55 நாடுகள் உள்ளன
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள் ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். (CNN) இந்த தகவலை தெரிவிப்பதாக ஒரு அறிக்கை குறிபிடுகின்றது
முஸ்லிம் நாடுகளில் உள்ள எண்ணை வளம் 74% வீதமாகும் இது முழு உலக எண்ணை உற்பதியின் வீதமாகும் இன்றைய நாளைய உலகை இயக்கும் பலம் என்று குறிபிடலாம் காஸ் எரிவாயு இது அமெரிக்க , ஐரோப்பா , சீனா போன்ற நாடுகளின் மொத்த வளத் தொகையுடன் ஒப்பிடும்போது 57% வீதமான காஸ் எரிவாயு முஸ்லிம் நாடுகளில் தான் அதிகம் இருக்கிறது தங்கம் விளையும் பூமியாக வும் 1 ட்ரில்லியன் தங்க சேமிப்பை கொண்ட நாடுகளாகவும் முஸ்லிம் நாடுகள்தான் இருக்கிறது இந்த 1 ட்ரில்லியன் தங்க சேமிப்பு அமெரிக்க , ஐரோப்பா நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த நாடுகளை விடவும் முஸ்லிம் உம்மாஹ் விடம்தான் அதிகமான தங்கவளம் இருக்கிறது , இராணுவ துறையை எடுத்துகொண்டால் 47லட்சம் ஆயுத படை வீரர்கள் முஸ்லிம் நாடுகளில் இருகின்றார்கள் இது அமெரிக்க , ஐரோப்பா , இந்தியா போன்ற நாடுகளின் மொத்த ஆயுதப்படை வீரர்களை விடவும் மிகவும் அதிகமானது என்று ஒரு ஆவணம் குறிபிடுகின்றது இது சரியாக ஆராயப்படவேண்டியது எனிலும் ஒரு ஒப்பீட்டுக்கு இதை எடுத்துகொள்ள முடியும்.
ஆனால் எங்களிடம் இஸ்லாம் கடமையாக்கிய கிலாபத் இல்லை இதுதான் இன்றைய எமது பிரதான பலவீனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் ‘அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்’ -ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378-
கிலாபத் உதையமாகும் காலம் மிகவும் அண்மிப்பதை போல் உணர முடிகின்றது கிலாபத் மீண்டும் ஏற்படுத்த பட்ட வேண்டும் அது தான் முழு மனித சமுகதுக்குமான விடுதலையாக அமையும்.

Blogger Themes

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More